search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் தற்கொலை"

    • கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது.
    • பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு, முத்தம்பாளையம், இமயம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு தீபக், கோகுல் (15) என 2 மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகன் தீபக் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கோகுல் வெள்ளோடு அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை கோகுல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனக்கு கண் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கோகுலின் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் கோகுல் மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து கோகுலின் தாய் நாகஜோதி வீட்டுக்கு வந்தார். வீட்டில் கோகுல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கோகுல் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கோகுலை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல் நன்கு படிக்காத காரணத்தால் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலை கைவிடும்படி பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள சின்னக்கோடியூர் காந்தி ரோடு கே. கே. சி நகர் பகுதி சேர்ந்தவர் சுரேஷ் இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் ரீகன் (வயது 18) என்பவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் ரீகனை கண்டித்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் இரவு ரீகனுக்கும் இவரது பெற்றோருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் உள்ள தனி அறையில் ரீகன் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் குடும்பத்தினர் அவரை மீட்டு ஜோலார்பேட்டையில் உள்ள கோடியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரீகனான் தந்தை சுரேஷ் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் இன்று அதிகாலை கொம்பதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • சிறுவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் கொம்பதாஸ்(வயது 14).

    இவர் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு மாணவன் கொம்பதாஸ் தனது பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் கொம்பதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவனது பெற்றோர் கதவை திறந்து உள்ளே சென்று கொம்பதாசை கீழே இறக்கினர்.

    தகவல் அறிந்து சீதபற்பநல்லூர் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் கொம்பதாஸ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொம்பதாஸ் கடந்த சில நாட்களாக செல்போனில் அதிக நேரம் விளையாடிக்கொண்டிருந்தாகவும், அதனை அவரது பெற்றோர் பார்த்து சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்து கொம்பதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படிப்பு வராத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.
    • இவர் ஓசூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கரிமங்கலத்தை அடுத்துள்ள வெள்ளையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சஞ்சய் (வயது 19).

    இவர் ஓசூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். சஞ்சய்க்கு சரியாக படிப்பு வரவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குதித்து சஞ்சய் தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை செல்வம் தந்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவர் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
    • தோப்பு ஒன்றில் பூச்சிமருந்தை குடித்துவிட்டு கோவிந்தன் இறந்து கிடந்தார்.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள தொகரப்பள்ளி ஆடாளம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 18) என்ற கல்லூரி மாணவர் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் பூச்சிமருந்தை குடித்துவிட்டு கோவிந்தன் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவர் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் பூர்ண பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் பூர்ணபிரகாஷ் (வயது15). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூர்ண பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்ணபிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிதுன் நித்தின் சரியாக படிக்காமல் கபடி விளையாட போய்விடுவார்.
    • வீட்டிற்கு வந்த தந்தை மகன் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தெற்கு வீதியை சேர்ந்தவர் தங்க மாதேஸ்வரன். இவரது மூத்த மகன் மிதுன் நித்தின் (வயது 17). இவர் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் சரியாக படிக்காமல் கபடி விளையாட போய்விடுவார். இதனை அவரது தந்தையும், தாயும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மிதுன் நித்தின் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் மாட்டும் கொக்கியில் வேஷ்டியால் தூக்குபோட்டு கொண்டார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த அவரது தந்தை மகன் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விழுப்புரம் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • ராஜ்பிரியன் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ராஜ்பிரியன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். உடனே சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். என்றாலும் ராஜ்பிரியன் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜ்பிரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார்.
    • வெளியே சென்றிருந்த பெற்றோர் ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ராஜ்பிரியன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். உடனே சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். என்றாலும் ராஜ்பிரியன் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜ்பிரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×